Sunday, July 4, 2010

பந்த் தேவையா

இன்று நாடு தழுவிய பந்த். எல்லோருக்கும் இன்னல் ஏற்படுத்துகின்ற இந்த பந்த் தேவையா என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழுகிறது. ஆனால் இத்தகைய எதிர்ப்பு இல்லை எனில் ஆள்பவர்கள் தங்கள் இஷ்டம் போல் எல்லா பொருள்களுக்கும் விலை ஏற்றி விட வாய்ப்பு உள்ளது.

Wednesday, June 30, 2010

அரசு இயந்திரம்

மத்திய மாநில அரசு ஊழியர்கள் அவ்வப்போது சம்பள உயர்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல் திறனில் மாற்றமில்லை என்பது தான் வேதனை. அரசு துறைகளில் பொது மக்கள் தங்களின் பணிக்காக செல்லும் போது அவர்கள் யாரை அணுக வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கம் தருவதில்லை தேவையில்லாத காரணங்களை சொல்லி காலம் தாழ்த்துவதும் வாடிக்கையாகி விட்டது. எத்தனை தான் கம்ப்யூட்டர் வழியாக செயல் பட்டாலும் இவர்களின் மன நிலையில் மாற்றம் வர வில்லை. இது மாறினால் தான் வல்லரசு ஆக வாய்ப்பு உள்ளது.